ஈரான் யுத்தநிறுத்தத்தை மீறிவிட்டது கடும் பதிலடிக்கு உத்தரவு – இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்

ஈரான் யுத்தநிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கடுமையான பதிலடியை கொடுக்குமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுவரைகள் உயிரிழப்புகள் காயங்கள் குறித்த எந்த அவசரவேண்டுகோளும் தங்களிற்கு வரவில்லை என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது.

ஈரானிலிருந்து ஏவுகணைகள் -இஸ்ரேல் இராணுவம் தெரிவிப்பு

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கிவருவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

அவற்றை இடைமறித்து செயல் இழக்கச்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மறுஅறிவித்தல் வரும் வரை பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் குறித்த இலக்குகளை எய்தியுள்ளோம் – யுத்த நிறுத்தத்திற்கு இணங்குகின்றோம் – இஸ்ரேல்

ஈரான் குறித்த தனது இலக்குகளை எய்திய பின்னர் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானிடமிருந்து இஸ்ரேலிற்கு உருவாகிய இருப்பு குறித்த இரட்டை ஆபத்துக்களான அணுவாயுத ஆபத்து மற்றும் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை ஆபத்து ஆகியவற்றை அகற்றியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானின் இராணுவதலைமைக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளோம்,அந்த நாட்டின் பல இலக்குகளை அழித்துள்ளோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்