பெண்ணின் வயிற்றில் 30 வருஷமா இருந்து கல்லாக மாறிய குழந்தை! மெய்சிலிர்க்கும் அதிசயம்

அல்ஜீரியாவைச் சேர்ந்த 73 வயது பெண்ணின் வயிற்றில் 30 ஆண்டுகளாக இருந்த கல்சியமடைந்த சிசு சமீபத்தில் மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி, ஜூன் 25 ஆம் தேதி Non Aesthetic Things என்ற X பக்கம் பகிர்ந்த CT ஸ்கேன் படத்தின் மூலம் பரவலாக பேசப்பட்டது.

கல்சியமடைந்த குழந்தையா?

இந்த நிலைமை மருத்துவ ரீதியில் ‘லிதோபீடியான்’ (Lithopedion) என அழைக்கப்படுகிறது. இது கருப்பையின் வெளியே, வயிற்றுப் பகுதியில் உருவான கர்ப்பமாகும். சிசுவிற்கு தேவையான ரத்த ஓட்டம் இல்லாததால் அது வளராமல் இறந்துவிடுகிறது. ஆனால் சிசுவை உடலிலிருந்து வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும்போது, மனித உடல் அதனை பாதுகாப்பு செயல்முறையின் கீழ் மெதுவாக கல்சியமாக கல்லாக்கி பாதுகாக்கிறது.

பல ஆண்டுகள் அறியப்படாமல் போனது எப்படி?

மருத்துவ வல்லுநர்கள் கூறுவதாவது, இந்நிலையில் பாதிக்கப்படுபவர்கள் வலியும், எச்சரிக்கையான அறிகுறிகளும் இல்லாமல் இயல்பாக வாழ்வதால், இது பல ஆண்டுகள் கண்டறியப்படாமல் இருக்கிறது. மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற 300க்கும் குறைவான சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. 2013ஆம் ஆண்டு கொலம்பியாவில் 82 வயது பெண்ணிடம் 40 ஆண்டுகள் வயிற்றில் சிசு இருந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தகவல் பரவியதும் பலர் வியப்பும், சந்தேகமும் கொண்டனர். “ஒரு பெண் 30 வருடம் சிசுவுடன் வாழ முடியுமா?” என சிலர் கேட்டனர்.

மருத்துவர்கள் இதற்கு பதிலளிக்கையில்,

மனித உடல் வெளி பொருட்களை வெளியேற்ற முடியாதபோது அவை தொற்றாக மாறாமல் கல்லாக்கும் இயற்கை தற்காப்பு செயலை மேற்கொள்கிறது என விளக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: பற்றியெரிகிறது கல்லுண்டாய்! இரவிரவாகப் பெரும் பதற்றம்! சுவாசப் பிரச்சினைகளால் மக்கள் அவதி

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ct-scan
பெண்ணின் வயிற்றில் 30 வருஷமா இருந்து கல்லாக மாறிய குழந்தை! மெய்சிலிர்க்கும் அதிசயம்
fire-jaffna
பற்றியெரிகிறது கல்லுண்டாய்! இரவிரவாகப் பெரும் பதற்றம்! சுவாசப் பிரச்சினைகளால் மக்கள் அவதி
Vimal-weerawansa
செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் - சபா குகதாஸ் தெரிவிப்பு!
army
விடுவிக்கப்பட்ட பலாலி அம்மன் ஆலயம் மீண்டும் இராணுவத்தால் தடைசெய்யப்பட்டது - வருத்தப்பட்ட மக்கள்!
nagathmbiran-movil
35 வருடங்களின் பின் இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட நாகதம்பிரான் ஆலயம்
twitter-killer
அபார்ட்மென்டில் துண்டு துண்டாக 9 உடல்கள்.. ஜப்பானை அலறவிட்ட 'ட்விட்டர் கொலையாளி' - தூக்குதண்டனை நிறைவேற்றம்