பெண்ணின் வயிற்றில் 30 வருஷமா இருந்து கல்லாக மாறிய குழந்தை! மெய்சிலிர்க்கும் அதிசயம்

அல்ஜீரியாவைச் சேர்ந்த 73 வயது பெண்ணின் வயிற்றில் 30 ஆண்டுகளாக இருந்த கல்சியமடைந்த சிசு சமீபத்தில் மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி, ஜூன் 25 ஆம் தேதி Non Aesthetic Things என்ற X பக்கம் பகிர்ந்த CT ஸ்கேன் படத்தின் மூலம் பரவலாக பேசப்பட்டது.

கல்சியமடைந்த குழந்தையா?

இந்த நிலைமை மருத்துவ ரீதியில் ‘லிதோபீடியான்’ (Lithopedion) என அழைக்கப்படுகிறது. இது கருப்பையின் வெளியே, வயிற்றுப் பகுதியில் உருவான கர்ப்பமாகும். சிசுவிற்கு தேவையான ரத்த ஓட்டம் இல்லாததால் அது வளராமல் இறந்துவிடுகிறது. ஆனால் சிசுவை உடலிலிருந்து வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும்போது, மனித உடல் அதனை பாதுகாப்பு செயல்முறையின் கீழ் மெதுவாக கல்சியமாக கல்லாக்கி பாதுகாக்கிறது.

பல ஆண்டுகள் அறியப்படாமல் போனது எப்படி?

மருத்துவ வல்லுநர்கள் கூறுவதாவது, இந்நிலையில் பாதிக்கப்படுபவர்கள் வலியும், எச்சரிக்கையான அறிகுறிகளும் இல்லாமல் இயல்பாக வாழ்வதால், இது பல ஆண்டுகள் கண்டறியப்படாமல் இருக்கிறது. மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற 300க்கும் குறைவான சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. 2013ஆம் ஆண்டு கொலம்பியாவில் 82 வயது பெண்ணிடம் 40 ஆண்டுகள் வயிற்றில் சிசு இருந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தகவல் பரவியதும் பலர் வியப்பும், சந்தேகமும் கொண்டனர். “ஒரு பெண் 30 வருடம் சிசுவுடன் வாழ முடியுமா?” என சிலர் கேட்டனர்.

மருத்துவர்கள் இதற்கு பதிலளிக்கையில்,

மனித உடல் வெளி பொருட்களை வெளியேற்ற முடியாதபோது அவை தொற்றாக மாறாமல் கல்லாக்கும் இயற்கை தற்காப்பு செயலை மேற்கொள்கிறது என விளக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: பற்றியெரிகிறது கல்லுண்டாய்! இரவிரவாகப் பெரும் பதற்றம்! சுவாசப் பிரச்சினைகளால் மக்கள் அவதி

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!