வானில் இன்று நள்ளிரவு நிகழவுள்ள அதிசயம்!

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று (12) நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை வானில் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர இதனைத் தெரிவித்தார்.

பெர்சீட் விண்மீன் தொகுப்பில் இந்த விண்கல் மழை ஏற்படுவதால் இது “பெர்சீட்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

நாளை அதிகாலை 5 மணியளவில் வடக்கு திசையில் இந்த விண்கல் மழை சிறப்பாகக் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விண்கல் மழையின் சிறப்பு, ஒரு மணி நேரத்தில் சுமார் 100 விண்கற்களைக் காணலாம் என்பதாகும். இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும்,

பெர்சீட் விண்மீன் கூட்டம் நள்ளிரவில் அடிவானத்திற்கு மேலே தோன்றத் தொடங்கி, அதிகாலை வரை மேல்நோக்கி நகரும்.

இந்த விண்கல் மழையைப் பார்க்க சிறந்த நேரம் அதிகாலை 5 மணியளவாகும். அப்போது வடக்கே பார்த்தால்இ ஒரு மணி நேரத்தில் சுமார் 100 விண்கற்களைக் காணலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!