🔴 VIDEO காருக்குள் சிக்கிய சிறுமியை புத்திசாலித்தனமாக மீட்ட இளைஞர்!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளியில் நடந்த சம்பவம் உள்ளூரில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காருக்குள் தவறுதலாக சிக்கிய சிறுமி, ஒரு இளைஞரின் புத்திசாலித்தனமான முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

பெத்தப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத்தில் குடும்பத்தினர் தங்கள் காரை பேக்கரிக்குப் புறம்பாக நிறுத்தியபோது, தவறுதலாக சாவி உள்ளே இருந்த நிலையிலேயே கதவுகள் பூட்டப்பட்டன. அதில் சிறிய சிறுமி சிக்கிக்கொண்டதால் பெற்றோரும் பொதுமக்களும் பதற்றமடைந்தனர்.

அந்த நேரத்தில் அங்கு இருந்த ஒரு இளைஞர், தனது மொபைல் மூலம் காருக்குள் இருந்து கதவைத் திறக்கும் முறையை விளக்கும் வீடியோவை தேடினார். அதைச் சிறுமிக்குக் காட்டிய அவர், அவளையும் அந்த படிகளை பின்பற்றச் செய்தார். சிறுமியும் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்ததில், கதவு திறக்கப்பட்டு அவள் பாதுகாப்பாக வெளியே வந்தார்.

சிறுமி பாதுகாப்பாக வெளியே வந்ததும், அங்கு இருந்தவர்கள் பெருமூச்சுவிட்டனர். தன்னுடைய சாமர்த்தியமும் விரைவான முடிவும் பெரிய விபத்தைத் தவிர்த்ததாகக் கூறி உள்ளூர்வாசிகள் அந்த இளைஞருக்கு பாராட்டு தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுமி எந்தவித காயமும் இன்றி மீட்கப்பட்டுள்ளதால், அந்த இளைஞரின் நிதானமான செயல் சமூகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!