விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்த பேருந்து – 71 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெராத் மாகாணத்தில் நேற்று (19.08.2025) இரவு கபூலுக்குச் சென்ற பேருந்து, லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதிலேயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்துக்குப் பின்னர் குறித்த பேருந்து தீப்பற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டவர்கள்.

இந்நிலையில் பேருந்திலிருந்த அனைத்து பயணிகளும் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் லொறி மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநரின் அதிகப்படியான வேகம் மற்றும் அலட்சியத்தாலே இவ் விபத்து ஏற்பட்டதாக ஹெராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!