விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்த பேருந்து – 71 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெராத் மாகாணத்தில் நேற்று (19.08.2025) இரவு கபூலுக்குச் சென்ற பேருந்து, லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதிலேயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்துக்குப் பின்னர் குறித்த பேருந்து தீப்பற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டவர்கள்.

இந்நிலையில் பேருந்திலிருந்த அனைத்து பயணிகளும் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் லொறி மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநரின் அதிகப்படியான வேகம் மற்றும் அலட்சியத்தாலே இவ் விபத்து ஏற்பட்டதாக ஹெராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!