விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்த பேருந்து – 71 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெராத் மாகாணத்தில் நேற்று (19.08.2025) இரவு கபூலுக்குச் சென்ற பேருந்து, லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதிலேயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்துக்குப் பின்னர் குறித்த பேருந்து தீப்பற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டவர்கள்.

இந்நிலையில் பேருந்திலிருந்த அனைத்து பயணிகளும் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் லொறி மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநரின் அதிகப்படியான வேகம் மற்றும் அலட்சியத்தாலே இவ் விபத்து ஏற்பட்டதாக ஹெராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!