மண்டைதீவு கிரிக்கெட் மைதான புனரமைப்பு பணியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ்ப்பாணம் – மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்ப கட்ட புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 20ஆம் திகதி அங்கு T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்த தகவல் உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, ரவைகளை மீட்க அனுமதி கோரினர்.

ஊர்காவற்றுறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்பேரில், இன்று (22) காலை விசேட அதிரடிப் படையினரின் பங்களிப்புடன் அந்த ரவைகள் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது ஊர்காவற்றுறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!