பிறந்த நாளன்று பறிபோன இளைஞனின் உயிர்: இலங்கையில் நடந்த சோகம்

இராகலை – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ஹாவா – எலிய காட்டுச் சந்தியில் நேற்று(21) இரவு அதிவேகமாக வந்த பாரவூர்தி ஒன்று, உந்துருளியில் மோதியதில் உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த உந்துருளி ஓட்டுநர் ஹாவா – எலிய பகுதியைச் சேர்ந்த மானெத் அபூர்வா என்பவர் ஆவார்.

தனது வீட்டிலிருந்து நுவரெலியா நோக்கி உந்துருளியில் சென்று கொண்டிருந்த இளைஞர், காட்டுச் சந்தியிலிருந்து நுவரெலியா நகருக்குள் நுழைந்தபோது, ​​இராகலையிலிருந்து நுவரெலியா நோக்கி வேகமாகச் சென்ற பாரவூர்தி, மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தியின் ஓட்டுநர் சந்தேகத்தின் பேரில் நுவரெலியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 21ஆவது பிறந்தநாள் இன்று(22) என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!