முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சட்டவிரோத சொத்துக்களை குவிப்பது தொடர்பான ஒரு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய வன்னியாராச்சி கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்பு அழைக்கப்பட்டிருன்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.