வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இணையத்தள வழியாக (online) வாடகை கார் தொடர்பான நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கையொன்றை வழங்கியுள்ளனர்.

அதன்படி இணையத்தள வழியாக (online) வாடகை கார் சேவைகளைப் பெறும்போது விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

அத்துடன், பணம் செலுத்துவதற்கு முன்பு கார் வாடகை நிறுவனத்தின் விபரங்களைச் சரிபார்க்குமாறும் அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மோசடி செய்பவர்கள் பணம் பெறுவது, அவர்களின் தொலைபேசிகளைத் துண்டிப்பது மற்றும் சேவையை வழங்காதது போன்ற முறைப்பாடுகள், தங்களுக்கு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்