நீதிமன்ற வளாகத்திற்குள் விளையாட்டுத் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்ணால் பரபரப்பு!

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக விளையாட்டுத் துப்பாக்கியுடன் வந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடோல்பிட்டியவைச் சேர்ந்த பெண் நீதிமன்றத்திற்கு நேற்று (27) வழக்கு ஒன்றிற்காக வருகைதந்துள்ளார்.

இதன்போது நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து விளையாட்டுத் துப்பாக்கியொன்றைக் கைப்பற்றியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நீதிமன்ற வளாகத்திற்குள் விளையாட்டுத் துப்பாக்கியுடன் நுழைய முயன்றதற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Ceylon Petroleum Corporation
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பு!
Suresh Saleh
தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி!
meta
சிறுவர்களுக்கு ஆபத்தா? மெட்டாவுக்கு நீதிமன்றம் அதிரடி
power cut
மின்சாரத் தடையைத் தவிர்க்க வேண்டுமா? நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு!
jaffna police issue
யாழில் சுற்றுலா சென்றவர்களை தாக்கிய பொலிஸார் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
fuel
எரிபொருள் விநியோகத்தில் முடிவுக்கு வருகிறதா 'ஒற்றை மற்றும் இரட்டை' இலக்க முறைமை?