இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு உயிரியல் பிரிவில் தோற்றவிருந்த தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளை தேசிய பாடசாலையில் கல்வி பயின்று வந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்றிரவு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மாணவி, இரவு உறங்கிய பின்னர் இன்று காலை கண்விழிக்காத காரணத்தினால் பெற்றோர் அவரைப் பரிசோதித்தபோது, அவர் சுயநினைவின்றி இருந்துள்ளார்.
இதன் காரணமாக, பெற்றோர் குறித்த மாணவியை தம்புள்ளை ஆதார மருத்துவமனை அனுமதித்துள்ளனர்.
இருப்பினும், அவர் அதற்கு முன்னரே உயிரிழந்திருந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
