விண்ணப்பப் படிவங்கள் மும்மொழிகளிலும் வெளியிடப்படும் : வெளியான அறிவிப்பு

இலங்கையிலுள்ள கிராமசேவகர் பிரிவுகளில், மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளிலும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.

அதன்படி, மக்களுக்கு தேவையான 22 விண்ணப்பங்கள் தற்போது மும்மொழிகளிலும் பிரசுரிப்பதற்கு தயார்நிலையில் உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மாதத்தில் இருந்து அரசதுறையின் அனைத்துப் படிவங்களையும் பொதுமக்கள், மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

கிராமசேவகர் பிரிவில் மக்களுக்கு மிகவும், அத்தியாவசியமான சில விண்ணப்பங்கள் இருக்கின்றன. அவை பல இடங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே இருப்பதை எமது அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

வடக்கில் அவை தமிழ் மொழியில் கிடைத்தாலும், ஏனைய மாவட்டங்களில் தமிழ் மக்களுக்கு அவை தமிழ் மொழியில் கிடைப்பதில்லை.

எனவே, அவர்களின் நலன்கருதி, மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான 22 விண்ணப்பங்கள் தற்போது மும்மொழிகளிலும் தயார் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றை விரைவில் மக்களுக்கு வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனினும், அதற்கு முன்னர் அந்த விண்ணப்பங்களை இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!