ட்ரம்பிடம் நோபல் பதக்கத்தை ஒப்படைத்த வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர்!

வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரும், 2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, நேற்று(15) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, தாம் பெற்ற நோபல் பரிசு பதக்கத்தை ட்ரம்பிடம் வழங்கியதாக, மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

வெனிசுலா மக்களின் விடுதலைக்காக ட்ரம்ப் காட்டிய உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்தச் செயலைச் செய்ததாக அவர் கூறினார்.

வெனிசுலாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ட்ரம்பின் ஆதரவைப் பெறுவதற்காக இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, மச்சாடோவை “துணிச்சலான பெண்” என்று பாராட்டிய போதிலும், தற்போதைய நிலையில் வெனிசுலாவை வழிநடத்த அவருக்குப் போதிய ஆதரவு இல்லை என்று ட்ரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!