அரகலய போராட்டத்தின் போது கொல்லப்பட்ட முன்னாள் எம்பி! 12 பேருக்கு மரண தண்டனை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்புக் அதிகாரி மீது நடத்தப்பட்ட போராட்டத்தின் போது அவர்களைத் தாக்கி கொலை செய்த வழக்கில் 12 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூவரடங்கிய கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (11) இத்தீர்ப்பை வழங்கினார்.

மேலும் நான்கு பேருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த கம்பஹா மேல் நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்தது.

ஏனைய 23 சந்தேகநபர்கள் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரகலய போராட்ட வேளையில் 2022 மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற கலகத்தின் போது, நிட்டம்புவ நகரில் வைத்து பொலன்னறுவை மாவட்ட எம்.பியும் அவரது பாதுகாப்பு அதிகாரியும், தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்