அரகலய போராட்டத்தின் போது கொல்லப்பட்ட முன்னாள் எம்பி! 12 பேருக்கு மரண தண்டனை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்புக் அதிகாரி மீது நடத்தப்பட்ட போராட்டத்தின் போது அவர்களைத் தாக்கி கொலை செய்த வழக்கில் 12 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூவரடங்கிய கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (11) இத்தீர்ப்பை வழங்கினார்.

மேலும் நான்கு பேருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த கம்பஹா மேல் நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்தது.

ஏனைய 23 சந்தேகநபர்கள் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரகலய போராட்ட வேளையில் 2022 மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற கலகத்தின் போது, நிட்டம்புவ நகரில் வைத்து பொலன்னறுவை மாவட்ட எம்.பியும் அவரது பாதுகாப்பு அதிகாரியும், தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!