பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரச பேருந்து! பொலிசார் தீவிர விசாரணை!

பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவுக்கு சொந்தமான CTB பேருந்து இன்று காலை சேவைக்கு பயன்படுத்த எடுத்துச் செல்லும்போது காணாமல் போய்வுள்ளதாக பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

காலை சுமார் 8 மணியளவில் தியத்தலாவ வெலிஹெல்கம பகுதியில் உள்ள ஆள்நடமாட்டமற்ற இடத்தில் அந்த பேருந்து இருப்பதாக பண்டாரவளை பொலிஸ் குற்றபிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிசாரும்,பண்டாரவளை CTB டிப்போ ஊழியர்களும் சென்று பேருந்தை பரிசோதனை செய்துள்ளனர்.

இதன் போது பேருந்தின் முன்பக்க கதவு பகுதியில் சேதம் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 12.20 மணி அளவில் அந்த பேருந்து அப்புத்தளை மேல் பாதை காஹகல்ல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சிற்றுந்தொன்றில் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பேருந்தை கொண்டு சென்றவர்கள் யார், எதற்காக கொண்டு சென்றனர் என்ற தகவல்கள் இதுவரையில் வெளியாகாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி