ஈரான் தாக்குதலுக்குத் திட்டமிடவில்லை: ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்படுவதற்கு முன்னதாக, ஈரான் தரப்பிலிருந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கான எவ்வித திட்டங்களும் இருக்கவில்லை என ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸிடம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த சனிக்கிழமை முன்னெடுத்த பாரிய வான்வழித் தாக்குதலுக்கு (Operation Epic Fury) முன்னதாக, ஈரானிடமிருந்து நேரடி அச்சுறுத்தல்கள் இருந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் தமக்கு கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

போதிய உளவுத் தகவல்கள் இன்றி இவ்வாறானதொரு பாரிய தாக்குதலை அமெரிக்கா ஏன் முன்னெடுத்தது என்பது குறித்து தற்போது அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி