கடந்த 3 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 163 மில்லியன் ரூபாயை கடந்தது!

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு கடந்த 03 நாட்களில் மாத்திரம் அதிவேக வீதிகளின் ஊடாக 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மாத்திரம் அதிவேக வீதிகளில் 434,338 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதில் கடந்த 12 ஆம் திகதி மாத்திரம் 45 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளது.

இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது விபத்துக்களுக்கு உள்ளானால், உடனடியாக 1969 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!