கல்கிஸ்சையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் யுக்ரைன் நாட்டுப் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிக்கு முன்பாக கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யுக்ரைன் நாட்டுப் பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் நாட்டுப் பெண், இலங்கை பெண் ஒருவரைத் தாக்கியதுடன், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும், குறித்த யுக்ரைன் நாட்டுப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளால் அவர், உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கல்கிசை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

விசாரணையில், குறித்த பெண் கடந்த 12 வருடங்களாக இலங்கையில் வசித்து வருபவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கை பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!