யாழ்ப்பாணத்தில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை: காரில் வாள்கள், ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது!

திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் குறித்த சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், யாழ் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றிருந்தது.

கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற சம்பந்தப்பட்ட கும்பல் அந்த இளைஞனை உடைகளை களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை யாழ். பொஸ்கோ பாடசாலை அருகில் கொண்டுவந்து விடுவித்துள்ளனர்.

இந்நிலையில், கார் வேகமாக ஓட்டி சென்றபோது வீதிக்கடமையில் இருந்த காவல்துறையினர் இடைமறித்தபோது நிறுத்தாது வேகமாக சென்றுள்ளது.

சந்தேகமுற்ற காவல்துறையினர் குறித்த காரை துரத்திச் சென்று இடைமறித்து சோதித்த நிலையில், அதற்குள் இருந்து இரு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளதோடு, ஆணொருவரின் சட்டையும் இரத்தக் கறையுடன் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காவல்துறையினர், குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 .5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விசாரணையில் கடத்தலுடன் தொடர்புடைய பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் காவல்நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!