பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்குத் தடுப்புக் காவல் உத்தரவு!

கட்டுநாயக்க பகுதியில் பொலிஸ் அதிகாரியுடன் போராடி, அவரது கடமை நேர துப்பாக்கியைப் பறித்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டுத் தப்பியோடிய நிலையில் கைதான நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் இன்று (16) மினுவாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

நேற்று (15) பிற்பகல் தேவமொட்டாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

எவ்வாறாயினும், அவர் பொலிஸ் காவலில் இருந்த போது, பிரதான வீதியில் வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவருடன் முரண்பட்டு, அந்த அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்துள்ளார். 

பின்னர் பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் பிரயோகம் நடத்தி விட்டு, குறித்த துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் அவர் தப்பியோடியுள்ளார். 

தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக நேற்றிரவே பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு விசேட தேடுதல் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டது. 

இதற்கமைய செயற்பட்ட நீர்கொழும்பு கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், திவுலப்பிட்டி பகுதியில் வைத்து சந்தேகநபரைக் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரின் வசம் இருந்த 31 கிராம் ஐஸ் போதைப்பொருள், கொள்ளையடிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி மற்றும் தப்பியோடப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திவுலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!