அமெரிக்கா நடத்திய சமீபத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியிலும், மத்தியஸ்தர்கள் மூலமாக அமெரிக்காவுடனான மறைமுக இராஜதந்திரப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகேய் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், கடந்த சில நாட்களில் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு சில யோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போர் மற்றும் இராஜதந்திரம் ஆகிய இரண்டையும் ஈரான் தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான கருவிகளாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலும் முறிந்துவிடவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
