யாழ்ப்பாணம் – கண்டி (A9) பிரதான வீதியில், மரடன்கடவலையின் மிதிவத்த பகுதியில் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று காலை (21) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச்சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பேருந்து, முன்னால் வீதியில் வலதுபுறம் திரும்பிக்கொண்டிருந்த லொறியொன்றின் பின்பகுதியில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதி சிகிச்சைக்காக கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
