அங்குலான பகுதிக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான ‘டோரா’ ரகப் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், அதிலிருந்த 11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படை ஊடகப் பேச்சாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, கடற்படையின் கோரிக்கைக்கு அமைவாக இலங்கை விமானப்படையின் உதவியும் பெறப்பட்டது.
இதன்படி, விபத்துக்குள்ளான படகைக் கண்காணித்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 17 ஹெலிகொப்டர் மற்றும் பெல் 412 ஆகிய விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
