சிறையிலிருந்தே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ தேர்வாகலாம்: சாந்த பண்டார

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சிறைக்குள் இருந்து தெரிவாகலாம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாலும் அவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சவை மக்கள் தெரிவு செய்வார்கள். அவரை ஜனாதிபதியாக்குவதற்கு பொதுஜன பெரமுன தீவிரமாக செயற்படும்.

அநுர அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரையும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிறையில் அடைக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றது. எமக்கு அது பிரச்சினையில்லை.

நீதித்துறையின் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. எம்மிடம் எஞ்சியிருப்பது நீதித்துறை மீதான நம்பிக்கை மாத்திரமே.

எனவே, நாமல் ராஜபக்சவையும் சிறையில் அடைத்தாலும் கூட சிறையில் இருந்தே அவரை ஜனாதிபதியாக்குவதற்கு நாங்கள் அயராது பாடுபடுவோம்.

நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் பிரசாரத்தின் முதல்படியாக, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை நடத்துவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

யாரும் எதிர்பாராத அளவில் பெருமளவிலான மக்கள் கூட்டத்தை அந்தப் பேரணியில் காண முடியும். இதனூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், நாமல் ராஜபக்சவுக்கு அவர்கள் தமது ஆதரவினை வெளிப்படுத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!