கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின்தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு, வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சிறைக் கூடத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் செனக பல்லதென்ன தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு நாளில் மூன்று பேர் வரையில் நாமல் ராஜபக்சவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாளைய தினம்(08.09.2026) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் நாமல் ராஜபக்ச கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
