தாயாரின் கண்முன்னே பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த 6 வயது சிறுமி!

மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து, பாடசாலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்ற பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், கொடஉட பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சனுதி சேனாரா என்ற 6 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திக்வெல்ல வடக்கு மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் அவர், காலையில் பாடசாலை செல்வதற்காக தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

மாத்தறையில் இருந்து மித்தெனிய நோக்கிச் சென்ற தனியார் பேருந்துக்கு கை காட்டி, அவர்கள் அதன் முன்கதவு வழியாக அதில் ஏற முயன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

முதலில் தாயாரும் சகோதரனும் பேருந்தில் ஏறியதை அடுத்து, இரண்டாவதாக சிறுமி பேருந்தில் ஏற முற்பட்டவுடன் பேருந்து முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

இதன் போது அவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து அதே பேருந்தின் பின் சக்கரத்திற்குள் சிக்கியதாகவும் ஆரம்ப கட்டப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் சிறுமியின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!