முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு இன்று (21) மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதையடுத்து மீண்டும் பிடியாணை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் அமைச்சரின் நான்கு பிணையாளர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள தலைமை நீதவான், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
மாத்தறை பிரதான நீதிபதி சத்துர திசாநாயக்க முன்னிலையில் இன்று (21) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
