பாரிய தாக்குதலை மேற்கொள்ளவிருந்தவர் கொழும்பில் அதிரடியாக கைது!

கொழும்பில் பாதாள உலக தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ கமாண்டோ படையின் ஓய்வுபெற்ற சார்ஜென்ட் மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் போதைப்பொருடன் நேற்று முன்தினம் இரவு மாலபேயில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து பல இராணுவ கமாண்டோ உடைகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

டுபாயில் உள்ள இராணுவ கமாண்டோ படையிலிருந்து தப்பிச் சென்ற ஒரு சிப்பாய் இந்த துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களை தனக்கு அனுப்பியதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.

அவர் பாதாள உலக தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் பெப்ரவரி மாதம் ஓய்வுபெற்ற இராணுவ கமாண்டோ படை உறுப்பினராகும். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!