பிரித்தானியாவின் புதிய குடிவரவுச் சட்டம்: இலங்கை குடும்பமொன்றை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

பிரித்தானியாவில் புதிய குடிவரவு சட்டத்திற்கு அமைய அங்கு வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.

பிரித்தானியாவில் புலம்பெயர் பராமரிப்புப் பணியாளர்களின் ஐந்து வயதுக்குட்பட்ட சிறு சிறுவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய பிரித்தானியாவில் தொடர்ந்து தங்குவதற்கு பெற்றோருக்கு விசா நீடிப்பு மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் சார்ந்திருப்போரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கமைய இலங்கையை சேர்ந்த வருணி அரச்சிகே என்ற பெண் ஸ்கொட்லாந்தில் பராமரிப்புப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

குறித்த பெண்ணுக்கு 2031ஆம் ஆண்டு வரை விசா நீடிக்கப்பட்டுள்ள போதிலும், அவருடைய கணவர் மற்றும் 8, 5 வயது குழந்தைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வேதியியல் பட்டமும், பிரித்தானியாவின் டண்டீ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் வருணி பெற்றுள்ளார். முறையாக அனைத்து விசா கட்டணங்களையும் செலுத்தி, அங்கு வரி செலுத்தி வாழும் தங்களுக்கு இந்த உத்தரவு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!