முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது தொடர்பாக முன்கூட்டியே கூறிய யூடியூபருக்கு எதிராக முறைப்பாடு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட உள்ளதாகவும், 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட உள்ளதாகவும் பதிவிட்ட யூடியூபர் சுதந்த திலகசிறிக்கு எதிராக சட்டத்தரணிகள் முறைப்பாட்டை செய்துள்ளனர்.

இந்த பதிவின் அடிப்படையில், ரணிலின் கைது குறித்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி நளின் பத்திரன தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் முடிவை இந்த யூடியூபர் எவ்வாறு முன்கூட்டியே அறிந்து கொண்டார் என்பது தொடர்பில் தாம் ஆச்சரியப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் இதே சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

அத்துடன் குறித்த யூடியூபர், அண்மையில் இடம்பெற்ற பொது நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது தேவையற்ற பாசத்தை வெளிக்காட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரதமர் போன்ற ஒரு ஆளுமைக்கு பொதுவில் எப்படி ஒருவர் இவ்வளவு பாசத்தைக் காட்ட முடியும் என்று ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (6)
யாழில் நீர் குழாய் புதைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
New Project t (4)
முத்தையன்கட்டு குடும்பஸ்தரின் மரணம்: 4 இராணுவத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
New Project t (3)
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!
New Project t (1)
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!
New Project t
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
“தமிழ்ல பேசு அம்மா” ஆங்கிலத்தில் பேசிய தாயிடம் அழுது புலம்பிய மகன்!