பேரிடரால் கண்டி மாவட்டத்தில் அதிகரித்த உயிரிழப்புகள்!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் அதிக சேதத்தை சந்தித்த கண்டி மாவட்டத்தில், இதுவரை (11) 240 பேரிடர் இறப்புகள் மற்றும் 75 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்டி மாவட்ட துணை பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் இன்றைய (11) நிலவரப்படி 54,988 குடும்பங்களைச் சேர்ந்த 1,89,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

20,155 குடும்பங்களைச் சேர்ந்த 70,282 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 6,097 குடும்பங்களைச் சேர்ந்த 21,456 பேர் 261 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் துணை பணிப்பாளர் இந்திக ரணவீர மேலும் தெரிவித்தார்.

12,974 குடும்பங்களைச் சேர்ந்த 45,732 பேர் உறவினர் வீடுகளில் வசித்து வருவதாக அவர் கூறினார். கண்டி மாவட்டத்தில், 2263 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 14,735 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்தவின் அறிவுறுத்தலின் பேரில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகங்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரணவீர மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

current bill
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
iran
ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் - நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு
food prices
இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்!
airport arrest
கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதான இரண்டு கனேடியர்கள்!
arrest
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது!
jaffna news
யாழில் கடந்த வருடத்தில் மாத்திரம் 62 கோடி ரூபாய் மோசடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை