கிளிநொச்சியில் மசாலாப் பொருட்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்களுடன் நால்வர் கைது.

கிளிநொச்சியில் கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மசாலாப் பொருட்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 300 கிலோகிராம் ஏலக்காய், 260 கிலோகிராம் மஞ்சள் தூள், 273 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட மசாலாப் பொருட்களுடன் இரண்டு (02) வாடகை வண்டிக கடற்படையினரால் கைப்பற்றியுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 முதல் 49 வயதுக்குட்பட்ட எரக்கண்டி, கல்முனைகுடி, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு (04) சந்தேக நபர்கள், மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள் மற்றும் இரண்டு (02) வாடகை வண்டிகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Nainadhivu Sri Nagapoosani Amman Temple 5
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா.
Chamber-House-of-Commons-Houses-Parliament-London
வெளிநாட்டு ஒன்றின் நாடாளுமன்றில் செம்மணிக்காக ஒலித்த குரல்!
New Project t
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து விடுதி உரிமையார்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!
17519568840
கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு! வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய சாரதி!
1736670096-Vehicle-Import-L
புதிய வரி விதிப்பிற்கு பின்னர் வெளியான வாகனங்களின் விலை நிலவரம்!
43e6079f-0c64-49a6-a859-de7fe7f5ad5e
யாழில் நடந்த துயரம் !முன்னணி பாடசாலையின் உயர்தர மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!