இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) ஒரே நாளில் இரண்டு தடவைகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று ஒரு பவுண் 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், இன்று காலை 5,000 ரூபாயால் உயர்ந்து 370,000 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 5,000 ரூபாயால் அதிகரித்து 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,125 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு காரணமாக தங்கத்தின் விலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
