இலங்கைக்கு எரிபொருளை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை (Refined Fuel) வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய எரிபொருள் தேவையை கருத்திற்கொண்டு, தட்டுப்பாடின்றி சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை வழங்குவதற்கு ரஷ்ய பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இடைத்தரகர்கள் இன்றி அரச மட்டத்திலான நேரடி உடன்படிக்கைகளின் ஊடாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

எரிபொருள் விநியோகம் மாத்திரமன்றி, இலங்கையின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் ரஷ்யா தனது ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!