ஈரான் தூதுவருடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி திடீர் சந்திப்பு!

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று புதன்கிழமை (25) கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து இரு தரப்பினரும் அவதானம் செலுத்தினர்.

அத்துடன், ஈரான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!