சுவிட்சர்லாந்தில் 4 தமிழ் அகதிகளின் நினைவாக வீதிக்கு பெயர் சூட்டல்: வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை!

சுவிட்சர்லாந்தின் சூர் (Chur) நகரில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு அகதிகள் தங்கியிருந்த முகாமில் நடத்தப்பட்ட கொடூரமான தீ வைப்புத் தாக்குதலில் உயிரிழந்த நான்கு தமிழ் அகதிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், அங்குள்ள ஒரு முக்கியப் பாதைக்கு ஜெர்மன் மற்றும் தமிழ் மொழிகளில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த 1989-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2-ஆம் தேதி, சூர் (Chur) மாநிலத்தில் உள்ள தமிழ் அகதிகள் முகாம் மீது இனவெறி கலந்த தீவைப்புத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த அநீதியான தாக்குதலில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த நான்கு இளம் தமிழர்கள் தீக்கிரையாகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த தமிழ் உறவுகள்:

கந்தையா பாலமுரளி

கந்தையா பாலமுகுந்தன்

சத்திவேல் தம்பிராஜா

தேவராஜா சின்னத்தம்பி

இந்தக் கொடூரச் சம்பவம் நடந்து 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் நினைவை என்றென்றும் நிலைநிறுத்தவும், பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கான சமூக நீதியை நிலைநாட்டவும் சூர் (Chur) நகராட்சி நிர்வாகம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அங்குள்ள சாலைப் பார்சல் எண் 6803-இல் (Parcel No: 6803) இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்த ஒரு புதிய பாதைக்கு, இந்த நான்கு தியாகிகளின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கிரவுண்டன் தமிழ் கலாசார மன்றத்தின் (Tamilischer Kulturverein Graubünden) ஆலோசனைகள் மற்றும் முழுமையான ஒத்துழைப்புடன் இந்தத் தனித்துவமான பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இப்பாதைக்கு ஜெர்மன் மொழியில் “Vier-Lichter-Weg” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தமிழ்ப் பொருள் “நான்கு விளக்குகள் கொண்ட பாதை” (நான்கு விளக்கு வீதி) என்பதாகும். உயிரிழந்த நான்கு தமிழர்களின் ஆன்மாவை ஒளிரும் விளக்குகளாக உருவகித்து இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின் இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும் மதிப்பளித்து, அந்நாட்டு அரசாங்கமே வீதிக்கு தமிழ்ப் பெயர் சூட்டியுள்ள இந்த நிகழ்வு, சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும், உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!