முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இத்தொடர்பான உத்தரவை கொழும்பு நீதவான் நிலுபுலி லங்காபுர வழங்கியுள்ளார்.

நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக சாட்சியங்களை சமர்ப்பித்தார். மேலும், விசாரணை இன்னும் நிறைவடையாததால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் கோரினார்.

இதற்கிடையில், சந்தேக நபரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்ன, சாட்சியங்களை முன்வைத்து, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் சாட்சியங்களை பரிசீலித்த பிறகு, நீதவான் நிலுபுலி லங்காபுர சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்து, வரும் 26ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!