இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து வெளியான தகவல்!

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கைக்கு எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்துள்ளார்.

“தற்போது, அத்தகைய அச்சுறுத்தல் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. எமது பாதுகாப்புப் படைகள் தேசியப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகின்றன

எனவே, தேசியப் பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று அமைச்சர் கூறினார்.

அத்துடன், திட்டமிட்ட குற்றக்கும்பல் தலைவர்கள் நாட்டிற்குத் திரும்பத் திட்டமிடுவதாக வெளியான செய்திகளுக்குப் பதிலளித்த அவர், தனது முந்தைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறினார்.

“சில போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அந்தக் கடத்தல் பாதையை விட்டுவிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர் என்றும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அந்தப் பாதையை விட்டு வெளியேற விரும்புவது ஒரு நேர்மறையான விடயம்,” என்று மட்டுமே தாம் தெரிவித்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicles
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!
india
யாழை வந்தடைந்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்!
passports
வீதியோரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கடவுச்சீட்டுகள்!
jaffna university
யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை - ரஜீவன் எம்.பி
maldives
மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்
jaffna sea
யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!