இலங்கைக்கு பில்லியன் கணக்கில் வருமானம், வெளியானது தகவல்

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து இதுவரை 163 பில்லியன் ரூபாய் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சுங்கத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட,

‘‘இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்குகளை தாண்டி செல்லும் திறன் சுங்கத்திற்கு உள்ளது. 2025 ஆம் ஆண்டில் நாங்கள் பெற்ற வருவாய் இலக்கு ரூ. 2,115 பில்லியன். கடந்த ஆண்டு, எங்கள் வருவாய் இலக்கு ரூ. 1,533 பில்லியனாக இருந்தது.

கடந்த ஆண்டு, நாங்கள் அந்த இலக்கை தாண்டி ரூ. 1,535 பில்லியன் வருவாய் ஈட்டினோம். அதேநேரம் இந்த ஆண்டும், ஜூன் மாத நடுப்பகுதியில், நாங்கள் ரூ. 900 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளோம்.

வாகனங்களைப் பொறுத்தவரை, 2025 பெப்ரவரி 1, முதல் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்தது. இதுவரை, சுமார் 14,000 வாகனங்கள இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதன் ஊடாக சுமார் ரூ. 165 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளோம். இந்த ஆண்டு, வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 450 பில்லியன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

facebook

Related Posts :

Special News :

Entertainment :

Special News

news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!
611c7164-847f-4dd5-bc75-86bf7e441f3d
யாழில் அதிகாரிகளின் கவனயீனத்தால் ஏற்படபோகும் உயிராபத்து?
Gu2-vP9XAAADiza
கண் மூடி திறப்பதற்குள் 26,000 அடி சரிந்த விமானம்.. கண்ணீர் விட்டு கதறிய பயணிகள்! திக்திக் சம்பவம்
batticalo
வானிலிருந்து பூமழைபொழிய.. தமிழர் பகுதியில் கேட்ட ஆரோகரா கோசம்
jaffna
கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சாதனை!
vavuniya-train-accident
ஓமந்தையில் புகையிரதம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாயும் மகளும் படுகாயம்