உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்குரிய செயன்முறைப் பரீட்சைகள் வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் எனப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சையானது பெப்ரவரி 7ஆம் திகதி முதல் பெப்ரவரி 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 74 பரீட்சை மத்திய நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக இன்று (பெப்ரவரி 2) முதல் அவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மாணவர்கள் தமக்குரிய பரீட்சை நிலையம் மற்றும் நேரத்தை அனுமதி அட்டையின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

crime
கொழும்பின் புறநகர் பகுதியில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட யுவதி!
namal
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
tiktok
இலங்கையில் டிக்டொக் நட்பால் நடந்த விபரீதம்!
srilanka
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையா?
gold price
உலக சந்தையில் வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
gold price
இலங்கையில் இன்று 4 இலட்சத்தை கடந்தது தங்க விலை!