ஈரான் ஏவுகணை தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
சற்று முன்னர் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகளைற இஸ்ரேலிய படையினர் அடையாளம் கண்டு அவற்றை இடைமறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை கிடைத்ததும் மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுமாறும் மறுஅறிவித்தல் வரை அங்கிருந்து வெளியேறவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளோம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.