ஈரான் தாக்குதலுக்குத் திட்டமிடவில்லை: ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்படுவதற்கு முன்னதாக, ஈரான் தரப்பிலிருந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கான எவ்வித திட்டங்களும் இருக்கவில்லை என ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸிடம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த சனிக்கிழமை முன்னெடுத்த பாரிய வான்வழித் தாக்குதலுக்கு (Operation Epic Fury) முன்னதாக, ஈரானிடமிருந்து நேரடி அச்சுறுத்தல்கள் இருந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் தமக்கு கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

போதிய உளவுத் தகவல்கள் இன்றி இவ்வாறானதொரு பாரிய தாக்குதலை அமெரிக்கா ஏன் முன்னெடுத்தது என்பது குறித்து தற்போது அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!