ஈரான் தாக்குதலுக்குத் திட்டமிடவில்லை: ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்படுவதற்கு முன்னதாக, ஈரான் தரப்பிலிருந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கான எவ்வித திட்டங்களும் இருக்கவில்லை என ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸிடம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த சனிக்கிழமை முன்னெடுத்த பாரிய வான்வழித் தாக்குதலுக்கு (Operation Epic Fury) முன்னதாக, ஈரானிடமிருந்து நேரடி அச்சுறுத்தல்கள் இருந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் தமக்கு கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

போதிய உளவுத் தகவல்கள் இன்றி இவ்வாறானதொரு பாரிய தாக்குதலை அமெரிக்கா ஏன் முன்னெடுத்தது என்பது குறித்து தற்போது அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!