இஸ்ரேல் ஈரான் தாக்குதல், 2 இலங்கைப் பெண்கள் படுகாயம்

இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஹைஃபா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து இரவு முழுவதும் ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்த தாக்குதலில் டெல் அவிவ் நகரில் கடும் சேதம் ஏற்பட்டிருந்ததுடன், பலர் கொல்லப்பட்டதுடன், ஏராளமான பொது மக்கள் படுகாயமடைந்திருந்தனர்.

அதிகாலை 3:30 மணியளவில் ஏற்பட்ட பலத்த தாக்குதலை தொடர்ந்து டெல் அவிவின் தெற்கே உள்ள ஒரு வீட்டில் பணியாற்றிய இலங்கை பெண் அந்த வீட்டின் குடும்பத்தினருடன் வெளியேற்றப்பட்டதுடன், தாக்குதலில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோல் பேட் யாமில் உள்ள மற்றொரு பெண் அதிகாலை 4 மணியளவில் தாக்குதலில் லேசான காயமடைந்துள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்நாட்டு உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல் அவிவிற்கு தெற்கே உள்ள பேட் யாமில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது ஈரானிய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனிடையே, நாட்டின் வடக்கே ஹைஃபா அருகே ஒரு குடியிருப்பு பகுதியை ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பல இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

டெல் அவிவ் அருகே நடந்த மற்றொரு தாக்குதலில் 60 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அவசர சேவை மேகன் டேவிட் அடோம் (எம்டிஏ) தெரிவித்துள்ளது.

அதே பகுதியில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர், அதே போல் யூடியன் அடிவாரத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர் என்று எம்டிஏ செய்தித் தொடர்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, “நாங்கள் 24 மணி நேரமும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்,” என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

“பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்தில் உள்ள எந்தவொரு இலங்கை நாட்டவரும் உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!