🔴 VIDEO விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை பார்வையிட்ட மோடி!

இந்தியாவின் அஹமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து லண்டன் விமான நிலையத்திற்கு புறப்பட் ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் 242 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் ஒருவரை தவிர்த்து 241 பேரும் உயிரிழந்ததாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஹமதாபாத் விமான நிலையத்துக்கு இன்று (13.06.2025) காலை சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விமான விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்..

பல உயிர்களை இழந்தது “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என்று தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் நாங்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வளவு திடீர் மற்றும் இதயத்தை உடைக்கும் வகையில் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

அவர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் அவர்களின் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

மேலும் இந்த வெற்றிடம் பல ஆண்டுகளுக்கும் உணரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்