🔴 VIDEO விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை பார்வையிட்ட மோடி!

இந்தியாவின் அஹமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து லண்டன் விமான நிலையத்திற்கு புறப்பட் ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் 242 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் ஒருவரை தவிர்த்து 241 பேரும் உயிரிழந்ததாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஹமதாபாத் விமான நிலையத்துக்கு இன்று (13.06.2025) காலை சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விமான விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்..

பல உயிர்களை இழந்தது “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என்று தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் நாங்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வளவு திடீர் மற்றும் இதயத்தை உடைக்கும் வகையில் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

அவர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் அவர்களின் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

மேலும் இந்த வெற்றிடம் பல ஆண்டுகளுக்கும் உணரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!