🔴 PHOTO குகையொன்றில் பிள்ளைகளுடன் எவருக்கும் தெரியாமல் வாழ்ந்த ரஷ்ய பெண்ணால் பரபரப்பு!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் ரஷ்யப் பெண் ஒருவர் தனது 6 வயது மற்றும் 4 வயது மகள்களுடன் எவருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தெடார்பில் மேலும் தெரியவருவதாவது,

ரஷ்யாவைச் சேர்ந்த 40 வயதான நீனா குட்டினா என்பவர், தனது இரண்டு மகள்களுடன் வணிக விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் கோவாவில் சில நாட்கள் தங்கி இருந்த நிலையில், அதன்பின் கடற்கரை ஓரமாகவே பயணம் செய்து கர்நாடக மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்கு வந்துள்ளார்.

அங்கு அவர் குகையில் தனது இரண்டு மகள்களுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும், முழுக்க முழுக்க இந்திய ஆன்மீக கலாசாரத்தை ஏற்றுக்கொண்டு தியானம் செய்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் , அந்த பகுதிக்கு ரோந்து வந்த பொலிஸ்அதிகாரிகள், துணிகள் உலர்த்தப்பட்டதை பார்த்தவுடன், “மனித நடமாட்டமே இல்லாத இந்த பகுதிகளில் யார் இருக்கிறார்கள்” என்று பார்த்தபோது, குகையில் ரஷ்ய பெண்ணும் அவரது இரண்டு மகள்களும் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து, அவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்களது விசா காலாவதி ஆகிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் அரசு மகளிர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதன் பின்னர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ரஷ்ய தூதரகத்தை தொடர்பு கொண்ட பொலிஸ் அதிகாரிகள், அவரையும் அவரது குழந்தைகளையும் பாதுகாப்பாக ரஷ்யா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

3cf01349-e92f-4b44-9571-3663f9f70192
புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக கூறி அகழ்வு பணி!
pillayan
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பிள்ளையானுக்கு முன்கூட்டியே தெரியும்! பாதுகாப்பு அமைச்சர்
Nainadhivu Sri Nagapoosani Amman Temple 5
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா.
Chamber-House-of-Commons-Houses-Parliament-London
வெளிநாட்டு ஒன்றின் நாடாளுமன்றில் செம்மணிக்காக ஒலித்த குரல்!
New Project t
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து விடுதி உரிமையார்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!
17519568840
கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு! வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய சாரதி!