இலங்கையில் அரசியல்வாதி ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு!

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், இன்று(12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாந்த முதுன்கொட்டுவ, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, காரில் வந்த கும்பல் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

மேலும், அவரது சடலம், ஹோமாகம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், நிலத் தகராறுகள் தொடர்பாக சாந்த தொம்கொடுவ பலமுறை பொலிஸ் முறைப்பாடு அளித்துள்ளமை தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!