இலங்கை: 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை!

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற பல நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய மருந்தக களஞ்சியசாலையில் தற்போது சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த பல மாதங்களாக புற்றுநோயாளிகளுக்கு ஒரு மருந்தின் பெரும் பற்றாக்குறை நிலவுவதாகவும், இது புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சில வரம்புகளுக்கு வழிவகுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது, ​​இந்த மருந்துகள் மற்றும் சுகாதார அமைப்பில் பல மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கு பற்றாக்குறை உள்ளதாகவும் மே மாதத்தில் கிடைத்த அதிகாரப்பூர்வ தரவு அறிக்கைகளின்படி, மத்திய மருந்தக களஞ்சியசாலையில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்