ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளவுள்ளார். வரும் புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐ.நா. பொதுச் சபையில் அவர் உரையாற்ற உள்ளார்.

மேலும், விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உட்பட பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். அதேபோல், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சிறப்பு சந்திப்பிலும் அவர் பங்கேற்க உள்ளார்.
இந்த விஜயத்திற்கு ஜனாதிபதியுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து செல்கிறார்.