இலங்கைக்கு மனைவியுடன் சுற்றுலா வந்தவர் திடீரென உயிரிழப்பு!

புத்தளம் – வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 09.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

77 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வெளிநாட்டு பிரஜை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி தனது மனைவியுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் வென்னப்புவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

facebook

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!